Tuesday, September 27, 2011

கூகுளின் வயது 13


இன்று செப்டம்பர் 27ல் கூகுள் தன் பன்னிரண்டாவது ஆண்டை முடித்து 13 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது.

இந்த இனிய நாளை அழகிய பிறந்த நாள் தீம் உடன் கொண்டாடுகிறது. எளிமையான கேக், கொஞ்சம் பலூன் இவற்றுடன் பிறந்த நாள் லோகோ அருமையாக உள்ளது.




முதல் பிறந்த நாள்.

1995 – லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.
1996 – பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.
1997 – கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர்-ல்தான், முதல் பிறந்த நாள்.

லோகோ அனைத்தையும் காண:
http://www.google.co.in/logos/


Monday, September 19, 2011

கூகுள் தரும் புதிய வசதி


நீங்கள் இதுவரை கூகுள் மேகக் கணிணியில் உங்கள் கோப்புகளை சேமித்து வைத்து இருப்பீர்கள். மிகவும் வசதியாகவும், தேவைப்பட்ட இடத்தில் பார்க்கும் வசதியையும் அனுபவித்து இருப்பீர்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தும் இருப்பீர்கள். இப்பொழுது அதனை இன்னும் மேம்படுத்தி கோப்புறைகளையும் சேமிக்கவும் வழி செய்து இருக்கிறது.




மேல் உள்ள படத்தில் அந்த வசதியை நீங்கள் காணலாம்.

மேலும் தெரிந்துகொள்ள:

Monday, September 5, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன்


மாதா, பிதா, குரு, தெய்வம் –
ஆசிரியர்களை முன்றாம் இடத்தில் வைத்து தெய்வத்திற்கும் மேலாக மதிக்கிறோம். 

இன்று ஆசிரியர்கள் தினம்.
ஒவ்வொரு மாணவனும் தன்னை உருவாக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லும் நாள். ஆசிரியர்களும் மாணவர்கள் மனதில் இடம் பிடித்து அவர்கள் நாட்டினை மேம்படுத்தும் நல்ல குடிமகனாக உருவாக்கும் அளவிற்கு தம்மை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கும் நல்ல நாள்.

என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் கை பிடித்து தூக்கி விட்டு இன்றைக்கும் வழி நடத்திக் கொண்டிருக்கம் எனது கிராம பள்ளிக்கூட ஆசிரியப் பெருமக்களுக்கு எப்படி நன்றி சொல்வது.
நானும் அவர்களைப்போல கற்றதை பிறருக்கு கற்பிப்பதுதான் அவர்களுக்கு சொல்லும் நன்றி என நினைக்கிறேன். 
இந்த இனிய நாளில் அவர்களின் வாழ்த்துக்களுக்காக 
தலை வணங்கி நிற்கிறேன்.